மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை : 293 வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் பட்டமேற்பு!

madurai aadheenam new aadhenam inaugration
By Anupriyamkumaresan Aug 19, 2021 03:41 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை விழா நடைபெறும் என மதுரை ஆதீனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் 293 மடாதிபதியாக ஹரிஹர தேசிகர் நியமனம் செய்யப்பட்டார். இதை தருமபுர ஆதீனம் முன்நின்று நடத்தி வைத்த நிலையில் தீட்ஷை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை : 293 வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் பட்டமேற்பு! | Madurai Aadheenam New Inaugration

இந்நிலையில் 293-வது ஆதீனமாக ஹரிஹர தேசிகர் பொறுப்பேற்ற நிலையில் 10நாட்கள் தொடர்ந்து குருபூஜை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 23ஆம் தேதி பீடோகரனம் என்னும் பீடத்தில் அமரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை : 293 வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் பட்டமேற்பு! | Madurai Aadheenam New Inaugration

அருணகிரி நாதர் மறைவால் அவரது அறைக்கு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் 293 வது புதிய ஆதீனம் ஹரிஹர தேசிகர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு ஆவணங்கள், நகை விவரங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.