மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு உலா வந்த பசு..! நோயாளிகள் அதிர்ச்சி..!
மத்திய பிரதேச மாநிலத்தில் பசு ஒன்று நோயாளிகள் இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் சுதந்திரமாக சுதந்திரமாக சுற்றித் திரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவு சுதந்திரமாக உலா வந்த பசு
மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்ட மருத்துவமனையில் நேற்று யாரும் இல்லாத நேரம் பார்த்து, ஐசியூ வார்டுக்குள் பசு ஒன்று நுழைந்து சுதந்திரமாக சுற்றி திரிந்துள்ளது.
இதைப் பார்த்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ மாவட்ட சுகாதார அலுவலருக்கு சென்றது.
இதனையடுத்து, ஒரு காவலர் உட்பட 3 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசு சுகாதார நிலையங்களில் இதுபோன்ற அலட்சிய சம்பவங்கள் மாநிலத்தில் அடிக்கடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கால்நடைகளை தடுக்க மருத்துவமனையின் இரு வாயில்களிலும் மாடு பிடிப்பவர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.