ரூ.12 லட்சம் செலவில் 24 மணி நேர பாதுகாப்புடன் மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம் - அப்படி என்ன சிறப்பு?

India Madhya Pradesh World
By Jiyath Jul 26, 2023 10:45 AM GMT
Report

ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் செலவில் மதியப்பிரதேச அரசால் பராமரிக்கப்படும் புனித மரம்.

அரசு பராமரிப்பு 

மத்தியபிரதேசத்தில் உள்ள சல்மத்பூரில் இந்த உயர் தர மரம் இருக்கிறது. மதியப்பிரதேச தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த வளாகத்திலிருந்த ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த புனித மரம் அமைந்துள்ள குன்று சாஞ்சி புத்த பல்கலைக்கழகத்திற்கு ஓதுக்கப்பட்டுள்ளது.

ரூ.12 லட்சம் செலவில் 24 மணி நேர பாதுகாப்புடன் மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம் - அப்படி என்ன சிறப்பு? | Madhya Pradesh Spends 12 Lakh Maintain V Tree I

இந்த மரம் அமைந்துள்ள முழுப் பகுதியும் பௌத்த தலமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. புத்த மதததை பின்பற்றுபவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த மரம் இங்கு நடப்பட்டுள்ளது. இந்த மரம் 15 அடி உயர இரும்பு வேலிக்குள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறது. இந்த மரத்தை பாதுகாக்க 4 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளுக்கு ரூ.26000 சம்பளம் வீதம் மாதத்திற்கு ரூ.1,04,400 வழங்கப்படுகிறது.

ரூ.12 லட்சம் செலவில் 24 மணி நேர பாதுகாப்புடன் மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம் - அப்படி என்ன சிறப்பு? | Madhya Pradesh Spends 12 Lakh Maintain V Tree I

எந்த பண்டிகை வந்தாலும் மரத்தின் பராமரிப்பிற்கு விடுமுறை இல்லை என்று பாதுகாவலர்கள் கூறுகிறார்கள். மரத்தின் பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டிற்கு ரூ. 12.48 லட்சம் செலவிடப்படுகிறது. சாஞ்சி நகராட்சி மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தனி தண்ணீர் டேங்கர் மூலம் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது. மேலும் வேளாண் துறை அலுவலர்கள் இந்த மரத்தை நோய் தாக்காமல் பாதுகாத்து வருகின்றனர்.

உயர்தர அழகிய நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த புனித மரத்திலிருந்து ஒரு இல்லை கூட காய்ந்துவிடாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து வருகிறார்கள்.

மரத்தின் சிறப்பு

அப்படி என்ன சிறப்பு இந்த மரத்திற்கு இருக்கிறது என்றால் "இந்த மரத்தை முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவினால் அந்நாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட மரக்கன்றிலிருந்து இந்த பீப்பல் மரம் நடப்பட்டுள்ளது. இது கெளதம புத்தர் ஞானம் அடைந்ததாக கூறப்படும் போதி மரத்திற்கு சொந்தமானது ஆகும்.

ரூ.12 லட்சம் செலவில் 24 மணி நேர பாதுகாப்புடன் மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம் - அப்படி என்ன சிறப்பு? | Madhya Pradesh Spends 12 Lakh Maintain V Tree I

இதுகுறித்து புத்த மத போதகர் சந்திரரதன் கூறுகையில் "புத்தர் போதகயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார். பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்ராவால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது.

இதே மரத்தின் ஒரு பகுதி தான் இப்போது சாஞ்சி பெளத்த பல்கலைக்கழக நிலத்தில் நடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.