திருடியதாக கூறி ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டு அடித்தே கொன்ற கொடூரம் - அதிர்ச்சி சம்பவம்...!
மத்திய பிரதேசத்தில் திருடியதாக கூறி ஒருவரை இயந்திரத்தில் கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடித்தே கொன்ற கொடூரம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மத்தியப்பிரதேசம், உஜ்ஜைனியில் திருட்டு குற்றச்சாட்டில் ஒருவரை இயந்திரத்தில் கட்டி வைத்து, தலைகீழாக தொங்கவிட்டு, இரக்கமின்றி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்திருந்தாலும், வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, கடந்த வியாழக்கிழமைதான் காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.