தக்காளியால் பிரிந்த உறவு - கணவன் மனைவி இடையே சோக சம்பவம்!

Tomato Madhya Pradesh
By Jiyath Jul 14, 2023 03:06 AM GMT
Report

தக்காளி விலை உயர்வு காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை உயர்வு

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாய் வரை விறப்பனை செய்யப்பட்டு வருகிறது. வாட மாநிலங்களில் 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.

இந்த விலை விலை ஏற்றம் காரணமாக தக்காளிக்கு பவுன்சர்ஸ், ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம் என்று பல வேடிக்கையான சம்பவங்கள் நடந்து வந்தாலும் இப்போது தக்காளி விலை உயர்வு காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

தக்காளிக்கு சண்டை

மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஹ்டோல் மாவட்டத்தில் டிபன் செண்டர் ஒன்றை சஞ்சீவ் பர்மன் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சமைக்கும்போது மனைவிக்கு தெரியாமல் கூடுதலாக இரண்டு தக்காளியை சேர்த்து சமைத்துள்ளார்.

தக்காளியால் பிரிந்த உறவு - கணவன் மனைவி இடையே சோக சம்பவம்! | Madhya Pradesh Man Furious Wife Left 98 Ibc

இதனால் அவரின் மனைவி "என்னிடம் கேட்காமல் ஏன் இப்படி செய்தீர்கள்" என்று கணவனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது.

இதன் காரணமாக மனைவி தனது மகளுடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பின்னர் மூன்று நாட்கள் கடந்தும் மனைவியை எங்கு தேடியும் கிடைக்காத பட்சத்தில் சஞ்சீவ் பர்மன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் மனைவி சண்டையிட்டு தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளனர்.