‘வயதுக்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள்’ - நடிகர் மாதவனுக்கு அறிவுரை
தமிழில் கடந்த 2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதெ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன் என்கின்ற மேடி.
அதன் பின் தொடர்ந்து பல படஙளில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பிரபல நடிகராக உயர்ந்தார்.
விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தற்போது 'ராக்கெட்ரி; நம்பி விளைவு' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
விஞ்ஞானியான நம்பி நாரயணன், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட இன்னல்களை, திரையில் மாதவன் அப்படியே கொண்டு வந்துள்ளார்.
இந்த படத்தின் புரோமோஷனில் பிஸியாக இருக்கும் மாதவன், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
சாக்லெட் பாய் என அனைவராலும் அழைக்கபடும் மாதவன் அண்மையில், சட்டை இல்லாத புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இது மாதவனின் மனைவிக்கு பிடிக்கவில்லையாம். 51 வயதாகும் நீங்கள், சட்டை இல்லாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர வேண்டாம், வயதுக்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள் என கண்டிப்புடன் அறிவுறுத்தினாராம்.
இந்த தகவலை மாதவனே சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.