உயிருக்கு போராடிய இளைஞர் - காரில் அழைத்துச்சென்று காப்பாற்றிய அமைச்சர்! நெகிழ்ச்சி வீடியோ!
பூவிருந்தவல்லியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்விற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் காரில் சென்று கொண்டிருந்தார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை கண்ட அமைச்சர், ஆம்புலன்சிற்காக காத்திருக்காமல் அவரின் காரிலேயே அந்த இளைஞரை ஏற்றி கொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அப்படியே சென்றுவிடாமல், அங்கேயே சிகிச்சைகளை கண்காணித்து, இளைஞரின் உடலில் சற்று முன்னேற்றம் அடைந்தவுடன் அந்த இடத்தை விட்டு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.