இந்தி திணிப்பை கைவிடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

M K Stalin DMK
By Irumporai Oct 16, 2022 09:33 AM GMT
Report

இந்தி திணிப்பு முயற்சியை கை விடுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கடிதம்

தமிழ்மொழி மட்டுமன்றி அனைத்து மாநில மொழிகளையும் உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்றும் அலுவல் மொழி தொடர்பாக எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்த கூடாது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி திணிப்பை கைவிடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் | M Stalin Write A Letter To Pm Modi

அலுவல் மொழி

மேலும் இளைஞர்கள் இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்