ஈரோடு தேர்தல் முடிவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து...!

M K Stalin Tamil nadu Election Erode
By Nandhini Mar 02, 2023 07:33 AM GMT
Report

ஈரோடு தேர்தல் முடிவில் திமுக முன்னிலை வகித்து வருவதால், தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.

இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

இதற்கிடையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறார். அதன் எதிரொலியாக இந்த வெற்றி என்றார்.

m-k-stalin-tamil-nadu-cm-erode-election-result

அமைச்சர்கள் வாழ்த்து

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து டி.ஆர். பாலு, அன்பழகன், கே.என்.நேரு உட்பட அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.