'' கடந்த 10 வருஷமா சென்னையை குட்டிச்சுவராக்கி வச்சிருக்காங்க '' - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின்
மழைநீர் தேங்கிய பகுதிகளில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நேரில் சென்று களஆய்வு செய்துள்ளார்.
ஆய்வுக்குப்பின் மழைநீர் தேக்கம் குறித்தும், ஒருநாள் மழைக்கே சென்னை ஸ்தம்பித்துப்போனது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “கடந்த 10 வருட ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. சென்னையை 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால்தான் மழைநீர் இப்படி தேங்குகிறது.
அடுத்த பருவ மழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சென்னையில் பெய்த இந்த கனமழையை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்காதது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, “வானிலையை துல்லியமாக கணிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு நினைவூட்டுவோம்” எனக் கூறினார்.