தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த 4 வாக்குறுதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்குறுதியை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்த திருவள்ளுவர் தினத்தில் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு என்ற குறளை குறிப்பிட்டுள்ளதுடன், வள்ளுவன் சொன்ன அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற்றல், ஊக்கமளித்தல் ஆகியவை திமுக ஆட்சியின் அடிநாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல் வாக்குறுதியாக சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக போராடும் துணிச்சல் என்று கூறியுள்ளார்.
வறியோர், எளியோர் வாழ்வுயர மனிதநேயம் திட்டங்கள் என்று தனது இரண்டாவது வாக்குறுதியை அளித்துள்ளார்.
தொடர்ந்து இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும், முன்னெடுப்புகள் என்று மூன்றாவது வாக்குறுதியையும், நான்காவதாக தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப்பணிகள் தமிழகத்தில் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.