ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

M. K. Stalin R. N. Ravi O. Panneerselvam
By Nandhini Aug 15, 2022 02:17 PM GMT
Report

ஆளுநர் தேநீர் விருந்து

சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

இந்நிலையில், இன்று 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள  ஆளுநர் மாளிகையில், தமிழக ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், இவ்விருந்தில் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

m.k.stalin

O. Panneerselvam