மீண்டும் உற்சாகத்துடன் பணிகளுக்கு திரும்புவேன்... - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதுகுறித்து நேற்று வெளியான செய்திக்குறிப்பில் -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நாளை (20.06.2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21.06.2022) திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த சூழலில், மாண்புமிகு முதலமைச்சருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே அந்த நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இவற்றிற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
தொண்டர்களுக்கு கடிதம்
இந்நிலையில், இது குறித்து தொண்டர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பணிகளுக்கு திரும்புவேன். தொடர்ச்சியான பணி, தட்பவெப்ப மாற்றத்தால் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இன்றும், நாளையும் ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால், அதன் பின் தொடர்ந்து பணிகளை செய்வேன். ஓய்வில்லை நமக்கு! முதலிடமே இலக்கு! என்று குறிப்பிட்டுள்ளார்.