"தலையில் அடிச்சு இனி குடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சேன்" - நடிகை குஷ்பூ கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த கவிஞர் வாலி

lyricist interview actress kushboo kavignar vaali
By Swetha Subash Jan 14, 2022 03:34 AM GMT
Report

ரீவைண்ட் : மறைந்த வாலிப கவிஞர் வாலி குறித்து பிரபலங்கள் பலர் அவர்களது நினைவுகளை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பகிர்ந்தனர்.

அவ்வாறு அந்த டிவியில் ஒளிபரப்பான ஒரு பேட்டியில் நடிகை குஷ்பூ, வாலியிடம் நிறைய கேள்விகளை கேட்டார்.

அதில் ஒன்றாக அவர் வாலியிடம், “மச்சி... ஓப்பன் தி பாட்டில்னு எழுதியிருக்கீங்க... நீங்க ஓப்பன் பண்ணியிருக்கீங்களா...?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வாலி,

“ஒரு காலத்தில் ஓப்பன் பண்ணிட்டு தான் இருந்தேன். அப்புறம் விட்டுட்டேன். 20 ஆண்டுகள் அந்த பழக்கம் எனக்கு இருந்தது.

இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் பலரும் மதுபழக்கம் கொண்டவர்களாகவே இருந்தனர். இயக்குனர் முத்துராமனுக்கு நான் 3 மூன்று படங்களில் வசனம் எழுதியுள்ளேன்.

முதல் நாள் மட்டும் சூட்டிங் செல்வது என் வழக்கம்; அதுவும் பூஜைக்காக. 1977 ல் முத்துராமன் படத்திற்காக சேலத்தில் முதல் நாள் சூட்டிங் முடித்து, இரவு புறப்பட தயாரான போது, நண்பர்கள் ஒரு வெளிநாட்டு ஸ்காட்ஜ் எடுத்து ஓப்பன் செய்தார்கள்.

நானும் தயாரானேன். முத்துராமன் பார்த்தார். ‛என்ன அண்ணே. நீங்களும் இப்படி பண்றீங்க.. கண்ணதாசனுக்கும் இப்படி தான் குடிச்சு உடம்ப கெடுத்துக்கிறாரு... நீங்களும் இப்படி குடிச்சா எப்படிணே...’ என என்னிடம் கேட்டார்.

நான் அவரிடம் ஒன்று கூறினேன்; இதை செய்தால் நான் இனி குடிக்க மாட்டேன் என்று. அவரும் அதை உடனே செய்தார். அப்போதே அவர் தலையில் அடித்து இனி குடிக்க மாட்டேன் என நான் சாத்தியம் செய்தேன்.

இன்று வரை நான் குடிப்பதில்லை. நான் என்ன சொன்னேன்? அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.” என கூறியிருக்கிறார்.