உயிருக்கு உயிரா காதலித்த காதலி... - இறந்த துக்கம் தாங்காமல் காதலன் எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் உறைந்த நண்பர்கள்

sad news lover death boyfriend suicide shocked friends
By Nandhini Feb 02, 2022 07:05 AM GMT
Report

மதுரை மாவட்டம், டீ கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பிரபுகாந்த் (21). இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். கடந்த மாதம் திடீரென தீபா உயிரிழந்தார். இதனால், மனவேதனையில் இருந்து வந்த பிரபு சில நாட்களாக யாருடன் பேசாமல் தனிமையாக இருந்து வந்திருக்கிறார்.

பின்னர், சென்னை வந்த பிரபுகாந்த், பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

இதனையடுத்து, பிரபுகாந்த் தனது வாட்ஸ்அப் மூலம், இதுவரை எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கு நன்றி, அப்பா மற்றும் அத்தை என்னை மன்னித்து விடுங்கள், பார்த்துக்கோங்க, யாரையாவது நான் கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள், எல்லோரும் சந்தோஷமாக இருங்கள், என்று வீடியோ அனுப்பி இருக்கிறார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் லட்சுமன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் பிரபுகாந்திற்கு போன் செய்து பேசியுள்ளர். அப்போது பிரபுகாந்த, எனது தீபா இல்லாமல் எனக்கு வாழ பிடிக்கவில்லை, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்திருக்கிறார்.

இதுபற்றி அவர்கள் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விடுதியின் கதவை உடைத்து பார்த்த போது பிரபுகாந்த் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உயிருக்கு உயிரா காதலித்த காதலி... - இறந்த துக்கம் தாங்காமல் காதலன் எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் உறைந்த நண்பர்கள் | Lover Death Boyfriend Commits Suicide Sad News