நாட்டுக்காக கைகளை இழந்த காதலன்; எல்லாமுமாக மாறிய காதலி - ரஷ்ய குண்டு வீச்சில் உருக்குலையாத காதல் காவியம்!
உக்ரைன் போரில் கைகளை இழந்த காதலனுக்கு கைகளாக மாறி பார்த்துக்கொண்ட காதலி.
ஆண்டரி - அலினா
உக்ரைனில் கீவ் நகரில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் ஆண்டரி - அலினா ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதற்கு பிறகு அலினாவை பேஸ்புக்கில் தேடி கண்டுபிடித்த ஆண்டரி இரவு முழுவதும் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
அப்போதுதான் இவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் அதிர்ச்சி நடந்தது. ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுக்க தொடங்கியது. 2022 பிப்ரவரியில் ரஷ்ய படைகள் வீசிய குண்டுகள் உக்ரைனை உருக்குலைத்து. இதனால் உக்ரைன் அரசு இளைஞர்களை போருக்கு அழைத்தது. இதில் ஆண்டரியும் சேர்ந்து கொண்டார். இதற்கு காதலி அலினா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நாட்டுக்கான பணியைத் தொடங்கினார் ஆண்டரி.
தொழில் நுட்ப பிரிவில் பணிபுரிந்த ஆண்டரிக்கு ட்ரோன்களை இயக்கும் பணியை உக்ரைன் ராணுவம் வழங்கியது. அப்போதுதான் காதலி அலினாவுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைத்தது. ட்ரோனை இயக்கியபோது கண்முன்னே அது வெடித்துச் சிதறியதில் ஆண்டரியின் கைகளும் முகங்களும் சிதைந்தது. பார்வையும் இரண்டு கைகளும் ஆண்டரிக்கு பறிபோனது.
தீராக் காதல்
இந்நிலையில் சம்பவம் அறிந்து மருத்துவ மனைக்கு ஓடிய அலினா பார்த்தது. பாதி உயிரில் துடிக்கும் காதலனைத்தான். அவர்களின் தீராக் காதலால் அலினா காதலனின் உடனிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். சுயநினைவு திரும்பிய பின்னர் ஆண்டரி நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்று அலினாவிடம் கூறியுள்ளார். ஆனால் ஆண்டரியின் பறிபோன கைகளாகவும் இழந்த பார்வையாகவும் மாறினார் அலினா .
ஊனம் என்ற தீயிலிருந்து ஆண்டரியை அன்பால் மீட்டெடுத்ததார் அலினா. தனது காதல் கணவனுக்கு எல்லா பணிகளையும் செய்து கொடுத்து எப்போதும் அவரின் கூடவே இருக்கிறார் அலினா. காதல் ஒரு புத்தகமாக இருக்குமேயானால் அந்த புத்தகத்தின் முதல் பாக்கமாக இந்த ஜோடி காலத்திற்கும் நிலைத்திருப்பார்கள். இந்த காதல் காவியம் இப்போது அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.