நன்றி மறந்த இபிஎஸ் - நஷ்டம் எங்களுக்கில்லை - எச்.ராஜா அதிரடி
கூட்டணி முறிவடைந்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா மத்தியில் ஆளுங்கட்சியாக பாஜகவும், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக திமுகவும் இல்லது என குறிப்பிட்டு, அதிமுக எங்கே உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு
அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, எப்போதும் பாஜகவுடன் ஒட்டுமில்லை, உறவும் இல்லை என கூறிய நிலையில், பாஜகவினர் இது குறித்து தேசிய தலைமையை முடிவு செய்யும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது என குறிப்பிட்டு, கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதும், பட்டாசு வெடித்து கொண்டாடியதும் பெரிய விஷயமல்லை என சுட்டிக்காட்டி, அதைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பட்டாசு வெடிக்க 10 பேர் போதும் என விமர்சித்து, இந்த 2 திராவிட கட்சிகளும் இல்லாமலே தாங்கள் கூட்டணி அமைத்து தமிழகத்தில் 20 சதவீத வாக்குகள் பெற்றோம் என்றும் அந்த தேர்தலில் திமுகவை விட 2 சதவீத வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றோம் என குறிப்பிட்டு பேசினார்.
அதிமுக ஒரு நெல்லிக்கனி மூட்டை
அதிமுக வெளியேறியதால் பாஜகவுக்கு நஷ்டம் இல்லை என கூறிய எச்.ராஜா, இருந்தாலும் கூட்டணியில் இருந்து ஒரு நண்பர் செல்வதை ஐயோ பாவம் என்று பரிதாபப்படலாம் என விமர்சித்து, அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
அதிமுக ஒரு நெல்லிக்கனி மூட்டை என விமர்சித்த அவர், அதனை காட்டி எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைத்தது பாஜக தான் என கூறி, அதனை மறந்து எடப்பாடி மறந்து விட்டார் என்றும் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் நஷ்டம் பாஜகவிற்கு இல்லை என்றும் மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் உள்ளது ஆனால் இதில் அதிமுக எங்குள்ளது என்றும் வினவியுள்ளார்.