பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அடுத்த பிரபலம் - சிம்புவுக்கு அடித்த அதிர்ஷ்டம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரபல நடிகை உள்ளே செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி 24 மணி நேரமும் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதலில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட வேலைகளுக்காக விலகினார்.
இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வாரூணி, ஷாரீக், அபிநய் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் வனிதாவும் வீட்டை விட்டு அனுப்பும்படி பிக்பாஸிடம் கதறி அழுது தானாக வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் முதல் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி, சதீஷ் ஆகியோர் உள் நுழைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் பிக்பாஸ் வீடு களைக்கட்ட தொடங்கிய நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை லாஸ்லியா மரியநேசன் வைல்ட் கார்டு எண்ட்ரி வழியாக செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. சீசன் 3ல் கவினுடனான காதல், நட்பு வட்டம் என ரகளையாக வந்த லாஸ்லியா தமிழில் ஃப்ரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் லாஸ்லியாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் லாஸ்லியா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளார்.