இங்கிலாந்தில் வீராசாமி உணவகம் - முடிசூட்டு விழாவில் கவன ஈர்ப்பு!

London
By Sumathi Apr 24, 2023 06:13 AM GMT
Report

லண்டனில் உள்ள பழமை வாய்ந்த இந்திய ஹோட்டல் இங்கிலாந்து மக்களை ஈர்த்து வருகின்றது.

வீராசாமி ஹோட்டல்

70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து மன்னராக சார்லஸ் அரியணையில் ஏறினாலும் அதிகாரபூர்வமாக முடி சூட்டிக்கொள்ளவில்லை.

இங்கிலாந்தில் வீராசாமி உணவகம் - முடிசூட்டு விழாவில் கவன ஈர்ப்பு! | London Veerasamy Hotel Attracted The People

அவரது முடி சூடும் விழா மே 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவை 70 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பாரம்பரிய விழா என்பதால் அந்த நகரம் விழா கோலமாக உள்ளது. இந்நிலையில், லண்டனின் மையப்பகுதியில் இயங்கி வரும் வீராச்சாமி என்னும் இந்திய ஹோட்டல் 1926-ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது.

100 வருட பழமை

இங்கு இந்தியா-இங்கிலாந்து இடையிலான உணவு கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளை வழங்கி வருகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஹோட்டலை,

இங்கிலாந்தில் வீராசாமி உணவகம் - முடிசூட்டு விழாவில் கவன ஈர்ப்பு! | London Veerasamy Hotel Attracted The People

தொழிலதிபர் கேமிலியா பஞ்சாபி மற்றும் இந்திய சமையல் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான அனுதி விஷால் ஆகிய இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த பழமை வாய்ந்த ஹோட்டல் அங்கு உள்ள இங்கிலாந்து மக்களின் கவனம் ஈர்த்து வருவதாக கூறப்படுகிறது.