தமிழக சட்டசபைக்கு 3 நாள் விடுமுறை
தமிழக சட்டசபைக்கு 3 நாள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ந்தேதி கூடிய தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 14-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
16-ந்தேதி முதல் 4 நாட்கள் இந்த இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் உரை வழங்கினார்கள்.
இந்த நிலையில், இன்று முகரம் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை, நாளை மறுநாள் வார விடுமுறை என்பதால் தொடர்ந்து சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறையாகும்.
அடுத்து வரும் 23-ந்தேதி சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.