பாலியல் வன்கொடுமை.. அத்துமீறியவரை அறையில் பூட்டி வைத்த பெண்!

Delhi Sexual harassment
By Sumathi Sep 27, 2022 06:48 AM GMT
Report

பாலியல் வன்கொடுமை செய்தவரை பெண் ஒருவர் வீட்டின் அறையில் பூட்டி வைத்துள்ளார்.

விமான பணிப்பெண்

டெல்லியில் மெஹ்ருலி பகுதியில் வசித்து வருபவர் 30 வயதான பெண். இவர் தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் இவருக்கு ஆண் நபர் ஒருவர் பழக்கமாகி உள்ளார்.

பாலியல் வன்கொடுமை.. அத்துமீறியவரை அறையில் பூட்டி வைத்த பெண்! | Locks Man Who Raped Her At Her House

அவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று இரவில் அந்த ஆண் நண்பர் மது போதையில் வந்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் மதுபோதையில் இருந்த அந்த நபரை பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டின் அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை.. அத்துமீறியவரை அறையில் பூட்டி வைத்த பெண்! | Locks Man Who Raped Her At Her House

தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின், நபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.