தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
tngovt
tnlockdown
tnfullllockdown
ஊரடங்கு நீட்டிப்பு
By Petchi Avudaiappan
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதோடு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளோடு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி பேருந்துகளில் 75% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி.
- ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமல்படுத்தப்படும்
- ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கத்தின் போது பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவை இயங்காது
- திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் அனுமதி
- ஜனவரி 31 ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
- உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி
- மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி
- 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்.
- அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
- அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு
- திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதி
- ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி
- இரவு நேரம் விமானம், ரயிலில் பயணம் செய்யவேண்டிய தேவை இருப்பவர்கள் பயணச் சீட்டுடன் வாகனத்தில் பயணிக்கலாம்
- அத்தியாவசிய தேவைகளான பால், பத்திரிக்கை, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த இதர வசதிகள் அனைத்து இரவு நேர ஊரடங்கின் போது செயல்படும்.
- பெட்ரோல் பங்க்குள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி.