ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு என்ன? நாளை முதல்வர் ஆலோசனை!
lockdown
cm
relaxation
discuss
By Anupriyamkumaresan
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அடுத்த வார ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என நாளை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் ஊரடங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கானது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

வரும் 4-ம் தேதியுடன் இந்த வார ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், நாளை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த வார ஊரடங்கில், கட்டுப்பாடுகள் அமலில் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
