‘’ வெற்றி விழாவில் மக்களை சந்திப்பேன் ‘’ : முதலமைச்சர் ஸ்டாலின்
நகர் புற உள்ளாட்சி தேர்தல் முடிவுக்குப் பின் மாவட்டங்களில் நடைபெறும் வெற்றி விழாக்களில் பங்கேற்பேன் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு வரவுள்ளது இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அரசு விதிப்படி நேரடி பிரசாரம் செய்யவில்லை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,தேர்தல் முடிவுக்குப் பின் மாவட்டங்களில் நடைபெறும் வெற்றி விழாக்களில் பங்கேற்பேன். கணொலி வாயிலாக பேசியதை மக்களை சந்திக்க தைரியமில்லை என கூறினார்கள்.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் காரணமாகவே காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டேன்; தேர்தல் முடிவுக்கு பிறகு மக்களை நேரில் சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.