‘’ எலெக்ஷன் வந்துட்டா மானம் , ஈனம் பார்க்கக் கூடாது ’’ - திமுகவினருக்கு அறிவுரை சொன்ன அமைச்சர்
தொடப்பக்கட்டை தனித்தனி குச்சியாக இருந்தால் பலம் இல்லை, தொடப்பக்கட்டை முழுவதுமாக இருந்தால்தான் பலம் என அமைஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நிமிலி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன் .
தேர்தல் என்று வந்துவிட்டால், ஈனம் மானம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும், சொந்தக்காரர்களிடம் சண்டை போட்டிருக்கிறார்கள், அவரிடம் ஓட்டு கேட்காமல் போகக்கூடாது. அவர்களிடமும் ஓட்டு கேட்க வேண்டும் என்றார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே பலம், தனித்தனியாக இருந்தால் பலம் இல்லை எனக்கூறி, தொடப்பக்கட்டை தனித்தனி குச்சியாக இருந்தால் பலம் இல்லை, தொடப்பக்கட்டை முழுவதுமாக இருந்தால்தான் பலம் என தெரிவித்தார். 15 வார்டில் ஒரு இடத்தில் கூட அதிமுக வரக்கூடாது. என பேசினார்.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
