லிவிங் டு கெதரும் இருக்கு..கல்யாணத்திற்கு முன்னாடி குழந்தையும் பெத்துக்கலாம் வினோதமான - பழங்குடியினர்
லிவிங் டுகெதரில் இருக்கா தங்களது பிள்ளைகளை குஜராத் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பழங்குடியினர் அனுமதித்து வருகின்றனர்.
கராசியா பழங்குடியினம்
இன்றைய முன்னேறிய சமூகத்திலும் திருமணத்திற்கு முன்பே உறவு வைத்து கொள்வது, குழந்தை பெற்று கொள்வதை தாண்டி தற்போது பிரபலமாக இருந்து வரும் லிவிங் டு கெதர் கலாச்சாரத்தை பல குடும்பங்களும் தவிர்த்து வருகின்றனர்.
ஆனால் இதனை பழங்குடியின மக்கள் சிலர் எளிதாக அனுமதித்து வருகின்றனர். ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் வாழும் கராசியா பழங்குடியினர் இது போன்ற கலாச்சாரத்தையே பின்பற்றி வருகின்றனர். இந்த மக்கள் பெண்கள் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கிறனர். இந்த பழங்குடி இனத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது சாதாரணம் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் கல்யாண கண்காட்சி
திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டு தங்கள் விருப்பப்படி ஆண் குழந்தையைத் தேர்ந்தெடுக்கவும் அந்த இன பெண்களுக்கு உரிமை உண்டு. இங்கு திருமணம் நடப்பதும் பெரிய வினோதமான நிகழ்வே.திருமணத்திற்காக இங்கு இரண்டு நாள் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதில், யாரையாவது பிடித்திருந்தால், அந்த நபரை துணை தேர்வு செய்வார்கள்.
பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கின்றனர். அப்போது அவர்கள் குழந்தையும் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் கிராமத்திற்குத் திரும்பும் இந்த ஜோடிக்கு பெற்றோர் ஆடம்பரமாக திருமணம் முடித்து வைக்கின்றனர். அப்படி திருமணத்தில் விருப்பமில்லை என்றால் திருமணம் செய்யாமலும் அந்த ஜோடி வாழலாம்.