இரவில் நெஞ்சு வலியால் துடி துடித்த சிறுமி பரிதாப பலி - குடும்பத்தினர் கதறல்

Telangana Death
By Thahir Apr 02, 2023 07:24 AM GMT
Report

13 வயது சிறுமி இரவில் நெஞ்சு வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்ததால் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

நெஞ்சுவலியால் துடி துடித்த சிறுமி 

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத்தில், சர்வந்தி என்ற 13 வயது வயது சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

அதன் பின்பு இரவு அவருக்கு திடீரன்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலியில் துடித்த சிறுமி அவரது பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

Little girl died due to chest pain

அதன் பின்பு நிலைகுலைந்து தரையில் விழுந்த சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை அந்த சிறுமிக்கு சிபிஆர் எனப்படும் முறையில் வாயோடு வாய் வைத்து மூச்சு வர முயற்சி செய்தார்.

பரிதாப பலி 

இருப்பினும் சிறுமி மயங்கிய நிலையிலேயே இருந்தார். இதனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். இந்த துயர சம்பவத்தால் மஹபூபாபாத் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.