அதிகமாகும் போதை பழக்கம் .. போலீஸ் லத்தி பூஜை பண்ணவா இருக்கு - ஆவேசமான அண்ணாமலை

BJP K. Annamalai
By Irumporai Nov 08, 2022 08:41 AM GMT
Report

காவல்துறையின் கைகளை கட்டிபோட்டால் நிகழ்வுகள் விபரீதமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிகரித்த போதை பொருள் விறபனை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தற்போது சில காலமாக இளைஞர்கள் பெண்களை துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வது அதிகமாகியுள்ளதாக கூறினார்.

அதே போல் பள்ளி மாணவர்களிடம் தற்போது போதை பழக்கம் அதிகரித்துள்ளதாக கூறிய அண்ணாமலை பள்ளி மாணவர்களிடம் கடந்த ஒரு வருடமாகத்தான் போதைப்பொருள் பயனபடுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளதாக கூறினார். 

அதிகமாகும் போதை பழக்கம் .. போலீஸ் லத்தி பூஜை பண்ணவா இருக்கு - ஆவேசமான அண்ணாமலை | Liquor Youngsters Says Bjp Annamalai

 பூஜை செய்யவா லத்தி 

தமிழகத்தில் தற்போது மதுவும் கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது , அதற்கு காவல்துறைன் கடிவாளம் போடாமால் கையை கட்டி நிற்கின்றனர் என கூறிய அண்ணாமலை . போலீசார் லத்தியை பூ போட்டு பூஜை செய்யவா வைத்துள்ளார்கள் ?

லத்திக்கு ஒரு மகத்துவம் உள்ளது காவல் துறை சீரழிந்தால் சமுதாயம் சீரழியும் ஆகவே லத்தியை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்த வேண்டும் என கூறினார்.