நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு !

pondicherry wineshop
By Irumporai Jun 07, 2021 04:27 PM GMT
Report

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் நாளை முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்  பார்களுக்கு அனுமதி இல்லை.என்றும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் புதுவை அரசு  கூறியுள்ளது