உலக கோப்பை வெற்றி; ஜெய் ஷாவுக்கு மெஸ்ஸி கொடுத்த எதிர்பாராத பரிசு - வாயடைத்த ரசிகர்கள்...!
உலக கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு, எதிர்பாராதவிதமாக மெஸ்ஸி பரிசு கொடுத்துள்ளார்.
ஜெய் ஷாவுக்கு மெஸ்ஸி கொடுத்த பரிசு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஆவார். நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி தனது ஃபிஃபா வெற்றிக்குப் பிறகு அவருக்கு எதிர்பாராத பரிசை வழங்கியுள்ளார். இது நெட்டிசன்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.
பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் 10-வது எண் கொண்ட T.Shirt டை பெற்றார். அதில் அந்த நாட்டின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி கையெழுத்திட்டார். அதில், ஜெய் ஷா’ (ஜெய் ஷாவுக்காக) என்ற வாசகங்கள் மெஸ்ஸியால் எழுதப்பட்டு, அதில் அவருடைய கையெழுத்தும் இருந்தது.
வைரலாகும் புகைப்படம்
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஒரு புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டார்.
அந்த பதிவில், ஷாவுக்கு மெஸ்ஸி பரிசளிக்கப்பட்ட T.Shift வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில்... “#GOAT தனது வாழ்த்துக்களை அனுப்புகிறது மற்றும் ஜெய் பாய்க்கு கையெழுத்திட்ட மேட்ச் ஜெர்சி! என்ன ஒரு அடக்கமான ஆளுமை. எனக்காக ஒன்றைப் பெறுவேன் என்று நம்புகிறேன்…. விரைவில்."
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்தனர்.
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இடையேயான FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டிக்குப் பிறகு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, புகழ்பெற்ற வெற்றிக்காக மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.