கூண்டுக்குள் கைவிட்ட நபரின் விரலை ஆக்ரோஷமாக கடித்து துப்பிய சிங்கம் : பதைபதைக்க வைக்கும் வீடியோ உள்ளே!
உயிரியல் பூங்கா ஒன்றில் மிருகக்காட்சிசாலை உதவியாளரின் கை விரலை சிங்கம் ஒன்று கடித்து துப்பிய சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜமைக்கா நாட்டு உயிரியல் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, செயின்ட் எலிசபெத்தில், மிருகக்காட்சிசாலை உதவியாளர் தனது கையை சிங்கம் இருக்கும் கூண்டுக்குள் விட்டு பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது செயலால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது கைவிரலை கவ்விக் கொண்டது. இதனால் பதறிப்போன அந்த நபர் தன்னால் முடிந்த வரை சிங்கத்தின் வாயில் சிக்கிய தனது கைவிரலை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார் ஆனால் முடியவில்லை.
Show off bring disgrace
— Ms blunt from shi born ?? “PRJEFE” (@OneciaG) May 21, 2022
The lion at Jamaica Zoo ripped his finger off. pic.twitter.com/Ae2FRQHunk
ஆரம்பத்தில் இது ஒரு வேடிக்கை தான் என நினைத்த பார்வையாளர்கள் இந்த சம்பவத்தை தங்களின் செல்ஃபோனில் படம் பிடித்தனர். பின்பு நடந்ததை கண்டு சுதாரிப்பதற்குள் அந்த நபரின் விரலைக் கடித்துக் கீழே துப்பியது சிங்கம்.
இதனை நேரில் கண்ட ஒரு பார்வையாளர், இந்த சம்பவம் மாலை 4.22 மணியளவில் நடந்ததாகவும், அப்போது சுமார் 15 பேர் அங்கு இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அங்கு நடைபெற்றுவந்த கண்காட்சி முடிவடையும் கட்டத்தை எட்டியிருந்ததாகவும் அப்போது உதவியாளர் ஒருவர் பார்வையாளர்களை கவரும் வகையில் தன் கையை சிங்கம் இருந்த கூண்டுக்குள் நுழைத்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக அவரின் வலது கையின் மோதிர விரலை சிங்கம் கவ்விக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
“அது நடந்தபோது, அது ஒரு நகைச்சுவை என்று நான் நினைத்தேன். அவர் அலறிக் கொண்டு கதறும் வரை அந்தச் சம்பவத்தின் தீவிரத்தை நான் உணரவில்லை.
வெளிப்படையாக, அவர் தரையில் விழுந்தபோது அங்கே என்ன நடந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர். பின்னர் எல்லோரும் பீதியடைய ஆரம்பித்தார்கள்” எனவும் கூறினார்.