சிங்கத்தை சீண்டிப் பார்த்த நபர்…அடுத்து நடந்த விபரீதம் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!
சீண்டிப் பார்த்த நபரின் கையை சிங்கம் கவ்விய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீண்டிப் பார்த்த நபரின் கையை கவ்விய சிங்கம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் விலங்கு உயிரியல் பூங்காவில் பெரிய சிங்கம் ஒன்று கூட்டுக்குள் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பார்வையாளர் ஒருவர் தடுப்பு சுவரில் ஏறி சென்று சிங்கம் இருக்கும் கூண்டுக்கு சென்றார். அருகில் வந்த நபரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது சிங்கம்.
சிங்கம் அமைதியாக இருக்கிறதே என்று நினைத்த அந்த நபர் கூண்டுக்குள் கையை விட்டு சிங்கத்தை சீண்டப் பார்த்தார்.
சட்டென எதிர்பாராத விதமாக அந்த நபரின் கையை கவ்வியது அச்சிங்கம். அதன் பிடியிலிருந்து கையை விடுவிக்க முடியாமல் அந்த நபர் வலியால் துடிதுடித்தார். சிரமப்பட்டு ஒரு வழியாக சிங்கத்தின் பிடியிலிருந்து அவர் தப்பித்தார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
शेर ने दबोच लिया शख्स का हाथ#ViralVideo pic.twitter.com/ih86qoYmr1
— Nandan singh (@Singh17Nandan) November 15, 2022