பான் கார்டுடன் ஆதாரை இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் - மத்திய அரசு அறிவிப்பு
பான் கார்டுடன் ஆதாரை இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்காக பலமுறை கால அவகாசம் கொடுத்தும் சிலர் இதனை செயல்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த 2 ஆவணங்களையும் இணைப்பதற்கான கடைசி தேதி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பருடன் நிறைவடைந்தது. ஆனால் இதனை நடப்பாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?
https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற லிங்கில் சென்று பான் கார்டை ஆதாருடன் இணைத்துள்ளதா என்பதை சோதனை செய்யலாம்.
- Income Tax e-filing வெப்சைட்டுக்கு நீங்கள் முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால் அங்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
- ஓடிபி வெரிஃபிகேஷன் நிறைவடைந்த பிறகு பான் கார்டு விவரங்களை கொடுத்து பாஸ்வேர்டு உருவாக்கி லாக்-இன் செய்யவும்.
- வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு அதில் ஆதாரை இணைப்பதற்கான லிங்க் இந்தப் பக்கத்தின் இடதுபுறத்தில் இருக்கும்.
- அதில் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை உள்ளிடவும். பின் லிங்க் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களின் இரண்டு ஆவணங்களும் இணைக்கப்பட்டுவிடும்.
செல்போன் வழியாக இணைக்க:
UIDPAN என டைப் செய்து உங்களது ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை பதிவிட்டு( உதாரணம்: UIDPAN 456514521487 ABCDE1234X) 56161 or 567678 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருந்தால் அந்த ஆவணங்கள் தாமாக இணைக்கப்பட்டு விடும்.