பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன் - இளையராஜா

Ilayaraaja Narendra Modi Uttar Pradesh
By Thahir Nov 19, 2022 10:03 AM GMT
Report

பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாத காலம் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இது காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே நீண்டகால பாரம்பரிய கலாசார தொடர்பை புதுப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஆடை தயாரிப்பு, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் - ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

டிசம்பர் 19 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Like Kashi, Tamil Nadu has an ancient history

இந்த விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்.

 நதிநீர் இணைப்பு திட்டத்தை அன்றே பாடினார் பாரதியார். தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி; காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது என்று கூறினார்.