சீரகத்தை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Cumin
Abdominal pain
life health
By Nandhini
4 years ago

Nandhini
in ஆரோக்கியம்
Report
Report this article
பொதுவாக எந்த ஒரு கார உணவும் சீரகத்தை பயன்படுத்தாமல் தயாரிக்கப்படுவது இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால், சீரகம் செரிமானம் ஆவதற்கு உதவும், நச்சுக்களை வெளியேற்றும்.
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சீரகத்தையும் அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.
தற்போது சீரகத்தை அதிகளவு எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் -
- அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும்.அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும், அளவாக பயன்படுத்துவதும் நல்லது.
- அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் அடிக்கடி ஏப்பம் வரும். ரொம்ப நாளாக அதிகமாக சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். சீரகத்தில் இருக்கும் எண்ணெய் எளிதில் அதிக அளவில் ஆவியாவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
- சீரகத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால், கர்ப்பினி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. குறை பிரசவம் உண்டாவதற்கு கூட இது காரணமாக உள்ளது. தினமும் அதிகமாக சீரகம் சாப்பிடுவதால், வயிற்று உப்பசம் ஏற்படும் அதுமட்டுமின்றி குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
- மாதவிடாய் காலங்களில் அதிகமாக சீரகம் எடுத்துக்கொண்டால் அது இரத்தப்போக்கை அதிகமாக ஏற்படுத்துகிறதாம். எனவே இது மாதிரியான சமயங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
- சீரகம் சக்கரையின் அளவை இரத்ததில் குறைப்பதற்கு உதவுகிறது. எனவே சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.