வாட்டி வதைக்கும் இரும்பலா? கவலை வேண்டாம் இதோ மூலிகை கஷாயம்

lifestyle-health
By Nandhini Jan 29, 2022 11:06 AM GMT
Report

இருமலை முன்றே நாட்களில் விரட்ட கூடிய கஷாயம் ஒன்றினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • துளசி இலை - 10
  • மிளகு - 12
  • சிற்றரத்தை - புளியங்கொட்டை அளவு
  • எலுமிச்சைசாறு - 1 துளி

செய்முறை

  • மூன்றையும் எடுத்து அம்மியில் வைத்து நன்றாக நசுக்கி அல்லது சிறு உரலில் இட்டு இடித்து வைக்கவும்.
  • இதை ஒரு டம்ளர் நீரில் கலந்து சிறிய மண்சட்டியில் வைத்து கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதித்ததும் அரை டம்ளராக்கி இறக்கி வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது வடிகட்டி எலுமிச்சைச்சாறு துளி சேர்த்து, தொண்டையில் வைத்து இதமாக வைத்து முழங்கவும்.
  • குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் இனிப்புக்கு தேன் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
  • இருமல் வரும் போது காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களிலும் மூன்று நாள் குடித்துவந்தால் இருமல் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும்.
  • தொண்டை வலியும் இருக்காது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கால் டம்ளர் அளவு கொடுக்கலாம்.