தூங்கும் முன்பு சுக்கு பால் குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?

lifestyle-health
By Nandhini Nov 15, 2021 11:18 AM GMT
Report

உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு. சுக்குவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

குறிப்பாக பலரும் இதனை சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்த மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த சுக்கு பொடியைக் கொண்டு வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதிலும் இதன் பொடியை பாலில் கலந்து இரவில் குடிப்பதனால் இன்னும் நல்ல ஆரோக்கியப்பலன்களை தருகின்றது.

தூங்கும் முன்பு சுக்கு பால் குடித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் -

  • நன்மைகள் தூங்கும் முன்பு சுக்கு பால் குடித்தால், தொண்டை புண் மாயமாய் மறையும். தொற்றுநோயைக் குறைப்பதில் மிகச்சிறந்த பொருள்.
  • தூங்கும் முன்பு சுக்கு பால் குடித்தால், உணவு உண்ட பிறகு ஏற்படும் வயிறு உப்புசம் சரியாகும்.
  • தூங்கும் முன்பு சுக்கு பால் குடித்தால், நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதுவும் சுக்கு பாலில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அதன் சத்து இன்னும் அதிகரித்து, உடலுக்கு இன்னும் அதிக நன்மைகளை அளிக்கும்.
  • தூங்கும் முன்பு சுக்கு பால் குடித்தால், வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றை எதிர்க்கும் அளவில் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • தூங்கும் முன்பு சுக்கு பால் குடித்தால், மூட்டு வலி மற்றும் கீல்வாதம்/ஆர்த்ரிடிஸ் போன்றவற்றில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கும்.

தூங்கும் முன்பு சுக்கு பால் குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? | Lifestyle Health

குறிப்பு

  • சுக்குவை அதிகமாக உட்கொண்டால், அது வயிற்று பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • சுக்கை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தால், அது நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும்.
  • சுக்கு சிலருக்கு சில நேரங்களில் வாயில் எரிச்சலை ஏற்படுத்தும்.