கண்புரை வர காணரங்களும்... தடுக்கும் வழிமுறைகளும்... விரிவாக பார்ப்போம்

problem eyes lifestyle-health
By Nandhini Aug 18, 2021 12:56 PM GMT
Report

கண்புரை என்றால் என்ன?

கண்களில் உள்ள கருவிழியில் வெள்ளைப்படலம் போல தோன்றுவதே கண்புரை நோய். இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும். அதிலும் முக்கியமாக சர்க்கரை நோய் மற்றும் அதிக ரத்தம் அழுத்தம் பிரச்சனை இருந்தால் கண்களில் புரை நோய் வரும்.

கண்புரை வர காரணங்கள்

கண்ணில் அதாவது காயம் பட்டு அதனால் கண்ணின் லென்ஸை உருவாக்கும் திசுவில் மாற்றம் ஏற்படும் பொழுது கண்புரை வரலாம்

மரபணு கோளாறுகளால் வரலாம்

கடந்த கலத்தில் கண்ணில் அருவை சிகிச்சை செய்ததில் எதாவது பக்க விழைவாக அல்லது வேறு காரணங்களுக்காக வரலாம்.

நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகளாலும் வரலாம்

சூரிய ஒளியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு வரலாம்

இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் வரலாம்

ஸ்டீராய்ட் ( corticosteroid ) மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் வரலாம்

கண்புரையின் அறிகுறிகள் :

கண்புரை ஏற்ப்பட்டதுமே ஆரம்பத்தில் தீவிரமான அறிகுறிகள் எதுவும் தெரியாது. அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாமல் சிரமப்படுவது, அடிக்கடி கண்களில் தூசு விழுந்ததைப் போன்ற உணர்வு, நிறங்கள் மங்கித் தெரிவது, மனிதர்களின் முகங்கள், பொருட்கள் என துல்லியமாக தெரியாமல் இருப்பது,எல்லாமே இரண்டிரண்டாக தெரிவது என இருக்கும். புரை வளர வளர பார்வை முழுதாக மங்கிப் போகும்.

கண்புரையின் வகைகள் :

கண்புரை மையப்புரை (nuclear), புறத்துபுரை (cortical), முதிர்ந்த புரை (mature), மிகமுதிர்ந்த புரை (hypermature) என வகைப்படுத்தப்படுகின்றன.

கண் புரை பிறகு தான் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமா?

இல்லை. எப்போது பார்வைக் குறைபாடு அறியப்பட்டுவிட்டதோ, எப்போது நம் அன்றாட வேலைகளில் ஒரு தடை ஏற்படுகிறதோ, அப்போதே அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம். முற்றிப் போனால் கண்ணுக்கும் ஆபத்து. அறுவைச் சிகிச்சையும் கடினமாகி விடும்.

கண்புரை வராமல் தடுக்க வழிமுறைகள் -

அன்னாசிப் பூ

அன்னாசிப் பூவை பொடி செய்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 2 டீஸ்பூன் மல்லித் தூள், ஆகிய அனைத்தையும் தண்ணீர் கலந்து தினமும் காலை, மாலை குடிக்க வேண்டும்.

பசலைக் கீரை

பசலைக் கீரையை தண்ணீர் கொதிக்க வைத்து 5 நிமிடம் நன்றாக கழித்து வடிகட்டி அந்த கீரையை அரைத்து பேஸ்ட் செய்து அதை வேக வைத்த நீருடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து குடித்து வர வேண்டும்.

பாதாம்

பாதாமை பாலில் ஊற வைத்து பேஸ்ட் செய்து அதை கண்களின் மீது தடவ வேண்டும் அல்லது தினமும் காலையில் வெறும் பாதாம் சாப்பிட்டு வரலாம்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும். எனவே தினமும் இரண்டு முறைகள் க்ரீன் டீ குடிக்கலாம்.

ஏலக்காய்

ஏலக்காயில் அதிகப்படியான ரிபோஃபைலின் இருக்கிறது. அதோடு பயோ ஃப்லேவனாய்ட் மற்றும் விட்டமின் சி நிறைந்திருக்கிறது. இவை கண்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாய் நிற்கிறது.