வயிற்றுப் புண்களை குணப்படுத்தும் முளைக்கீரை கூட்டு! சுவையாக செய்வது எப்படி?
காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அடிக்கடி உணவு சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் வயிறு மற்றும் குடல்களில் புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. இப்படி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீர முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் (கீறியது) - 4
பாசிப்பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 4
டேபிள்ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
கீரையை நன்றாக மண் போக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பாசிபருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
இத்துடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் வேக வைத்த பாசிபருப்பை சேர்க்க வேண்டும்.
தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்க வேண்டும்.
கீரை முக்கால்வாசி வெந்ததும், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்க்க வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்க வேண்டும்.
சூப்பரான சத்தான முளைக்கீரை கூட்டு ரெடி.