ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் குழம்பு! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health
By Nandhini Aug 03, 2021 01:06 PM GMT
Nandhini

Nandhini

in உணவு
Report
125 Shares

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டைக்காய், நாட்டுச் சுண்டைக்காய் என இருவகை உண்டு. மலைகள் மற்றும் காடுகளில் தானாக வளர்ந்து காணப்படுவது மலைச் சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வயிற்று பிரச்சனையால் அவதிபடுபவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டக்காயனது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. அது ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தவிர்க்கும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது.

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு கைப்பிடி அளவு

சின்ன வெங்கயம் - 8

பூண்டு - 8

சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு

மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி - சிறிது

கடுகு - சிறிதளவு

உளுந்தம் பருப்பு - சிறிது வறுத்து

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 6

மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகு - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 2 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

வெந்தயம் - 8 சிறிதளவு

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் குழம்பு! சுவையாக செய்வது எப்படி? | Lifestyle Health

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு சிவக்க வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் சுண்டக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்தெடுத்துக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்ற வேண்டும். எ

ண்ணெய் காய்ந்ததும் அதில், கடுகு, உளுந்து போட்டு தாளிக்க வேண்டும். தாளித்த பிறகு அதில், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விட வேண்டும். பிறகு, மஞ்சள் பொடி சேர்த்து, அதனுடன் அரைத்த விழுது சேர்க்க வேண்டும்.

கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்த்து, டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு, நன்கு வற்றிய பிறகு இறக்க வேண்டும்.

சுவையான சூப்பரான சுண்டைக்காய் வற்றல் குழம்பு ரெடி.