பெண்கள் ருத்ராக்ஷம் அணிந்து கொள்ளலாமா?
இந்துக்களின் புனிதமாக கருதப்படும் மாலை என்றால் அது ருத்ராக்ஷம்தான். குறிப்பாக சிவனை வழிபடும் சைவர்கள் கையில் எப்போதும் ருத்ராக்ஷம் இருக்கும். சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுக்களே ருத்ராக்ஷம் என்று நம்பப்படுகிறது.
சிவன் மட்டுமின்றி விநாயகர், அம்பாள், விஷ்ணு, பிரம்மா, சூரியன் போன்ற தெய்வங்களும் ருத்ராக்ஷம் அணிந்து உள்ளதாக புராணங்கள் கூறப்பட்டுள்ளன.
பொதுவாக சாமியார்கள், சாதுக்கள் என்றாலே ருத்ராக்ஷம் அணிந்த கோலம்தான் நம் மனக் கண்களில் வந்து முன்பு நிற்கும். அதேபோல், சாமியார்கள் மட்டுமல்ல எல்லோருமே ருத்ராக்ஷம் அணிந்து கொள்ளலாம். சிலர் ருத்ராக்ஷம் என்பது சிவனின் அடையாளமாக பார்ப்பதால், பெண்கள் அணியக் கூடாது என்று கூறுகிறார்கள். இது தவறானது.
இந்த பூமியில் பிறந்த எந்த ஒரு மனிதனும் ருத்ராக்ஷம் அணிந்து கொள்ளலாம். சிவனை எடுத்துக்கொண்டால் சிவன் இல்லையேல் சக்தி இல்லை. அதே போல் சக்தி இன்றியேல் சிவன் இல்லை. ஆணும், பெண்ணுமாகி நிற்பவன் சிவன். எனவே, பெண்கள் ருத்ராக்ஷம் அணியக் கூடாது என்பது எல்லாம் உண்மை கிடையாது.
ருத்ராக்ஷம் அணிவதில் ஆண், பெண் பேதம் கிடையாது. எந்த வயதைச் சேர்ந்தவர்களாயினும் ருத்ராக்ஷம் அணிந்து கொள்ளலாம். காலை, மாலை என எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த மாலையை அணியலாம்.
சிலர் குளிக்கும் போது ருத்ராக்ஷத்தை கழற்றி வைக்கலாமா என்று கேள்வி எழும். ஒன்றும் கவலை வேண்டாம்.
ருத்ராக்ஷம் போட்டுக்கொண்டு குளிக்கலாம். தண்ணீரில் குளிக்கும்போது ருத்ராக்ஷம் பாதிப்பது கிடையாது. அதேபோல், வெந்நீரில் குளிக்கும்போது, உடலில் போடப்படும் ரசாயன சோப் காரணமாக ருத்ராக்ஷம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ருத்ராக்ஷம் அணியும்போது கடைப்பிடிக்க வேண்டியவை -
- ருத்ராக்ஷம் வாங்கியதும் அதை அப்படியே அணிந்து விடக்கூடாது.
- ஒரு வாரத்துக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் அதை ஊற வைக்க வேண்டும்.
- ஒரு வாரம் கழித்து, பிறகு தண்ணீர் விட்டு சுத்தம் செய்து, அதை வெயிலில் காய வைத்து, திருநீறு போட்டு நாள் முழுவதும் வைக்க வேண்டும். அடுத்த நாள் அதை பசும்பாலில் கழுவி, தண்ணீர் விட்டு அலசி, ருத்ராக்ஷத்துக்கான பூஜை, மந்திரங்கள் சொல்லி அணிய வேண்டும்.
- பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு நாட்களில் ருத்ராக்ஷத்தை அணியக் கூடாது. தீட்டு கழிந்த பிறகு ருத்ராக்ஷம் அணிந்து கொள்ளலாம்.
- இன்றைக்கு செயற்கையாக பிளாஸ்டிக்கில் ருத்ராக்ஷம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ருத்ராக்ஷத்தை பயன்படுத்தக் கூடாது. அதனால் எந்த பலனும் கிடைக்கப்போவது இல்லை. இயற்கையான ருத்ராக்ஷத்தை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும்.