வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

life-style-health
By Nandhini Jul 30, 2021 10:51 AM GMT
Report

பாகற்காய் என்றாலே பாதி பேருக்கு முகம் அஷ்ட கோணத்தில் செல்லும்; குறிப்பாக குழந்தைகளுக்கு. அதற்கு காரணம் அதிலுள்ள கசப்புத் தன்மை தான். ஆம், கசப்பு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பாகற்காய் தானே.

நம் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள் சாவதற்கு பாகற்காயை உண்ணச் சொல்லி நம் வீட்டில் பெரியவர்கள் நம்மை வலியுறுத்துவார்கள். நம்மில் பல பேருக்கு அதன் நன்மை அது வரைக்கும் மட்டுமே தெரிந்திருக்கும்.

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு தேவையான சத்துகள் உள்ளன.

ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றின் அபாயத்தை குறைக்கும்.

வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? | Life Style Health

நீரிழிவு

நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக போராடுகிறது. இதில் சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது. வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் எடுத்துக் கொண்டால், அது ரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

மலச்சிக்கலை போக்கும்

பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளது. வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் எடுத்துக் கொண்டால், நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை பாகற்காய் போக்குகிறது.

குடலை

பாதுகாக்கும் வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் எடுத்துக் கொண்டால், குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் நீக்கும்.

மஞ்சள்காமாலை நோய்

வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் எடுத்துக் கொண்டால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.

புற்று நோயை தடுக்கும்

பாகற்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை அடிக்கடி நாம் உணவில் எடுத்துக் கொண்டால் அது புற்று நோய்க்கு வழிவகுக்கும் நச்சு செல்களை அழித்து உடலை காக்கிறது.

கல்லீரல் பிரச்சனை

வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராது.

மூலநோய்

வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.

நோயெதிர்ப்புச் சக்தி

வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் எடுத்துக் கொண்டால், நோய்த்தொற்றுகள் அண்டாமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.