மூளை செல்களை தாக்கி அழிக்கும் ஜிகா வைரஸ் பரவல் ஆரம்பம்! தற்காத்துக் கொள்ள என்ன செய்யலாம்? எச்சரிக்கும் மருத்துவர்கள்

life-style-health
By Nandhini Jul 12, 2021 12:08 PM GMT
Report

தற்போது கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் தொற்று பரவ ஆம்பித்து விட்டது. இதனால், தமிழகத்துக்கும் ஜிகா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.

ஜிகா வைரஸ், ஜிகா காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்வோம் -

ஜிகா வைரஸ் என்பது டெங்கு காய்ச்சல் போல கொசு கடிப்பதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய்.

இந்த ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 5ல் நான்கு பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாமலேயே மறைந்துவிடும். ஜிகா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல் அறிகுறி தென்படும்.

பொதுவாக ஜிகா வைரஸ் தொற்று உள்ள கொசு கடித்தால் இரண்டு முதல் 14 நாட்களில் தான் இந்த அறிகுறி தெரியும்.

அறிகுறிகள் ஜிகா வைரஸ் தொற்று இருந்தால் காய்ச்சல், உடலில் புள்ளிகள், மூட்டு வலி, குறிப்பாக கை, பாத இணைப்புகளில் வலி, கண்கள் சிவத்தல் போன்றவை ஏற்படும். இதனுடன் தலைவலி, உடல் வலி, கண் வலி, சோர்வு, வயிற்று வலி போன்றவையும் ஏற்படும்.

மூளை செல்களை தாக்கி அழிக்கும் ஜிகா வைரஸ் பரவல் ஆரம்பம்! தற்காத்துக் கொள்ள என்ன செய்யலாம்? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Life Style Health

ஜிகா வைரஸ்ஸிலிருந்து தற்காத்துக் கொள்ள

ஜிகா வைரஸ் கிருமியை பரப்பும் கொசு டெங்கு கொசு போல நல்ல தண்ணீரில் முட்டையிடும். இதனால், வீட்டைச் சுற்றி பிளாஸ்டிக் கிளாஸ், இளநீர் கூடு, பாட்டில், டயர் போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்திவிடவும்.

சுற்றுப்புறத்தை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் இந்த கொசுக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

எச்சரிக்கும் மருத்துவர்கள் டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுதான் இந்த நோய் தொற்றையும் பரப்புகிறது. கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகளை இந்த கொசு கடித்தால் ஏற்படும் பாதிப்பு மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருக்கும். கருச்சிதைவு கூட ஏற்படலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தகவல் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கு இந்த தொற்று காரணமாக சிசுவின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

இதனால், குழந்தை தலை சிறுத்துப் பிறக்கக்கூடும். இதை மைக்ரோ செஃபாலே அல்லது தலை சூம்பிப்போதல் என்று சொல்வார்கள்.

மூளை செல்கள் பாதிக்கப்படும், மூளை செல்கள் அளவு குறைந்துவிடும். கண்கள் பாதிக்கப்படும். மூட்டுகள் பாதிக்கப்படும்.

மூட்டு செல்கள் அளவு குறைவதன் காரணமாக உடல் அசைவது கூட முடியாத சூழல் குழந்தைக்கு ஏற்படலாம்.

ஜிகா தொற்று உள்ள நபரை கடிப்பதன் மூலம் ஏடிஸ் கொசுவில் வைரஸ் தொற்றிக்கொள்ளும்.

இந்த கொசு வேறு ஒரு மனிதனை கடிப்பதன் மூலம் அவருக்கும் இந்த நோய் பரவுகிறது. பாலியல் உறவு மூலமாகவும், ரத்தம் செலுத்துதல் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது.

இந்த காய்ச்சல் தீவிரமாக வெளிப்படும்போது பெரியவர்களுக்கு மூளை, நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படும். ஜிகா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கிடையாது. தடுப்பூசியும் கிடையாது. ஜிகா வைரஸ் தொற்றுள்ள கொசு பரவலைத் தடுப்பது மட்டுமே ஒரே தீர்வு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.