முளைக்கட்டின பச்சைப் பயிறு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சுக்கோங்க!
அதிகம் தண்ணீர் தேவைப்படாத பயிர் வகைகளில் ஒன்றான பச்சைப் பயிறு எல்லா வகை நிலங்களிலும் விளையக்கூடியது.
சிறு செடிகளாக வளரும் இவற்றை அறுவடைப் பருவம் வந்ததும், சிறிய பீன்ஸ் வடிவில் இருக்கும், காய்களைப் பறித்து, காயவைத்து அதன் பின், அவற்றை அடித்து, பயறுகளை சேகரிப்பர். நம் பாரம்பர்யம் சுட்டிக்காட்டிய ஆரோக்கிய உணவு வகைகளில் முக்கியமானவை முளைகட்டிய பயறுகள்.
முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பயறு வகையை நீரில் ஊற வைத்து, பின்பு முளைக்க வைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.
குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.
முளைக்கட்டுதல்
முளைக்கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி ஊறிய பயறுகளை ஒரு துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள் நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.
நோய் எதிர்ப்பு சக்தி
வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவாக முளைகட்டிய பச்சைப் பயிறு இருக்கிறது. இதை சாப்பிட்டால் அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது அல்சரைக் குணப்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால்
சிலருக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு அதிகம் கலந்து, இரத்த அழுத்த பாதிப்புகள் உண்டாகலாம், அவர்களும் பச்சைப் பயிறை உணவில் சேர்த்து, பாதிப்புகள் நீங்கி, நிம்மதி அடையலாம்.
மாதவிடாய்
மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி மற்றும் மன மாற்றங்களை கூட நம்மால் சமாளிக்க முடியும். பச்சைபயிரில் விட்டமின் பி, ஃபோலேட், பி6 ஆகியவை கிடைக்கின்றன. இவை நம் ஹார்மோன்களை பேலன்ஸ் செய்திடும். அதனால் மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய வயிற்று வலி,தலைவலி, சோர்வு ஆகியவற்றை தடுக்க உதவிடும்.
எடை குறைவு
பச்சைப்பயிறில் அதிகப்படியான ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைவான உணர்வைத் தரும். அதோடு இது நம் பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் தேவையற்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள தேவையிருக்காது.