இந்த காயை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களை வேராடு அழித்துவிடுமாம்?

life-style-health
By Nandhini Jun 11, 2021 10:04 AM GMT
Report
106 Shares

யாரும் அறிந்திராத தகவல்! நம் இயற்கை நமக்கு பல வகையான கொடைகளைஅள்ளிக் கொடுத்துள்ளது. அந்த கொடைகளில் நாம் உண்ணும் உணவும் ஒன்று.

அதலைக்காய் என்னும் காய் இயற்கை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று. 'அதலைக்காய்' என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர்களுக்கும், ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் 'அதலைக்காய்'.

தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் புகழ்பெற்ற காய்களில் ஒன்று ‘அதலைக்காய்’. பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்த இக்காய், பேச்சுவழக்கில் ‘அதலக்காய்’ என்று அழைக்கப்படுகிறது.

கோவைக்காய்போலக் கண்மாய்க் கரைகள், வேலியோரங்கள் போன்றவற்றில் வளரும் கொடி வகை இது. பச்சையாகச் சாப்பிட்டால் வாய்ப்புண், நாக்குப்புண் குணமாகும். பொரியலாக செய்து சாப்பிட்டால் உணவுக்குச் சுவை கூட்டும்.அதலைக்காய் நீரிழிவு, மஞ்சள்காமாலை நோய்க்குச் சிறந்தது என மக்களிடையே பரவலாகச் சொல்லப்படுகிறது.

இந்த காயை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களை வேராடு அழித்துவிடுமாம்? | Life Style Health 

அதலைக்காய்யில் இருக்கும் எண்ணற்ற பலன்களைப் பற்றி பார்ப்போம்

எடை குறைப்பு:

அவரைக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. இதனால் இது பசியை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டிருக்கிறது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளதாக கூறுகிறார்கள். எடையை குறைக்க விரும்புபவர்கள் அதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் உடலின் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

வயிற்றுப்புண் குணமாக

அதலைக்காயின் இருபுறமும் காம்புகளை நீக்கிவிட்டு துண்டு துண்டாக வெட்டி, உப்பு சேர்த்த மோரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அடுத்தநாள் வெயிலில் காயவைத்து வத்தலாகச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெயில் வத்தலைப் பொரித்து உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

சர்க்கரை நோய்:

அதலை காயில் உள்ள பல்வேறு சத்துக்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.. குறிப்பாக கையின் நடுப்பகுதியில் உள்ள சதைப் பகுதி இன்சுலின் போல செயல்பட்டு சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.

சிறுநீரக கற்கள் கரைய:

காயில் உள்ள பைடோநியூட்ரின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்க வல்லது. இதனால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறிது சிறிதாக உடைக்கும் வல்லமை கொண்டது. எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த காயை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களை வேராடு அழித்துவிடுமாம்? | Life Style Health

புற்றுநோய் செல்கள்:

அதலைக்காய் யிலுள்ள லெய்ச்சின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுத்து நோய்களிலிருந்து காக்கிறது. மேலும் இந்த காயில் உள்ள பல சத்துக்கள் புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக இது கணையத்தை பெருமளவு பாதுகாத்து கணைய புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

எய்ட்ஸ்:

எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளான சிவப்பணுக்களின் குறைவுகளை தடுத்து சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து அவர்களை பாதுகாக்கிறது.