"வாடிய மலரென உதிர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு" - எம்.பி ஜோதிமணி உருக்கம்

Tamil nadu
By Thahir Dec 21, 2022 02:56 AM GMT
Report

அம்மா நீங்கள் இல்லாத உலகில் நிழல் இல்லை. வாடிய மலரென உதிர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு என எம்.பி ஜோதிமணி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

துடிப்பான அரசியல்வாதி 

கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான இவர் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு நன்கு அறிமுகமானவர்.

தொடர்ந்து தனது தொகுதிமக்களை தினம்தோறும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வரும் ஜோதிமணி தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாகவும், சமூகசீர்கேடுகளுக்கு எதிராக தனது குரலை ஆளும் அரசுகளுக்கு அழுத்தமாக பதிவு செய்து வரும் ஒரு துடிப்பான அரசியல்வாதியாக இருந்து வருகிறார். 

"வாடிய மலரென உதிர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு" - எம்.பி ஜோதிமணி உருக்கம் | Life Is Falling Like A Withered Flower Jothimani

ஜோதிமணி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பெரிய திருமங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை வீழ்த்தி முதல் முறையாக வெற்றி பெற்றார்.

உருக்கமான பதிவு

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஜோதிமணி ஒரு உருக்கமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

"வாடிய மலரென உதிர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு" - எம்.பி ஜோதிமணி உருக்கம் | Life Is Falling Like A Withered Flower Jothimani

தனது சமூகவலைத்தள பக்கத்தில், அம்மா நீங்கள் இல்லாத உலகில் நிழல் இல்லை. வாடிய மலரென உதிர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு. என்றேனும் ஒருதினம் அழைத்துச் செல்வீர்களென்கிற நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது. Love you Amma என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.