‘’ அய்யா அவரே பாவம் கொஞ்சம் விடுங்களேன் ‘’ சட்டசபையில் அப்பாவு துரைமுருகன் கல கல
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அப்போது கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ. அர்ச்சுணன் சட்டப்பேரவையில் பேசும்போது எடப்பாடி தொடங்கி ஓ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்களை புகழ்ந்து பேசினார்.
அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் அப்பாவு கேள்வி நேரத்தி்ன் போது கேள்வியை மட்டும் கேளுங்கள் புகழாரம் வேடாம் எனக் கூறினார் .அப்போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் :
எல்லாரும் சட்டப்பேரவையில் பேசும் போது தலைவர்,துணைத் தலைவர் பற்றி பேசினார்கள்.தற்போதுதான் எம்எல்ஏ ஒருவர் கட்சியின் அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணி பற்றி பேசுகிறார்.
பாவம்,அவரை விட்டு விடுங்களே ,என்று கூறினார்.இதனைக் கேட்டு அவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அவைதலைவர் அப்பாவு அனைவரும் குபீரென்று சிரித்தனர்.
குறிப்பாக அப்பாவு அவைதலைவர் அப்பாவு இடையே நடக்கும் இந்த நகைச்சுவை பேச்சு ஒவ்வொரு முறையும் அரங்கேறி சட்டசபையினை கலகலப்பாக மாற்றிவிடுகிறது