விரைவில் இந்தியா உங்களுக்கு (பாஜக) தக்க பாடம் புகட்டும் - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காட்டம்..!
விரைவில் இந்தியா உங்களுக்கு (பாஜக) தக்க பாடம் புகட்டும் என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை எந்த உதவியும் செய்யவில்லை. காவல்துறையினர் அதிகமாக இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
உச்சநீதிமன்றம் தலையீட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரோ, பிரதமரோ ஏன் எங்களை காண வரவில்லை என மணிப்பூரில் முகாமில் இருந்த சிறுமி கேட்டாளர்.
இந்தியா தக்க பாடம் புகட்டும்
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்தீர்கள் ஆனால் சாதாரண மக்களை கைவிட்டதால் பாண்டியனில் செங்கோல் எரிந்தது.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக ஏன் பாஜக அரசு விளக்கம் அளிக்காமல் உள்ளது என கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை பெண்களுக்கு எதிரான குற்றங்களும் உயர்ந்துள்ளது.
எங்களை ஹிந்து படிக்க சொல்வதை நிறுத்தி விட்டு நீங்கள் சிலப்பதிகாரம் படியுங்கள். கண்ணகி ஏன் மதுரையை எரித்தால் என்று தெரியுமா? என பேசினார்.
மேலும் விரைவில் இந்தியா உங்களுக்கு (பாஜக) தக்க பாடம் புகட்டும் என காட்டமாக பேசினார்.