தாய் கண்முன்னே.. சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை - தேடுதல் பணியில் அதிர்ச்சி!

Coimbatore
By Sumathi Jun 21, 2025 06:36 AM GMT
Report

சிறுமியை சிறுத்தை கவ்விக் கொண்டு சென்ற நிலையில் சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுத்தை கொடூரம்

 கோவை, பச்சைமலை எஸ்டேட் பகுதியில் பல வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில், பணிபுரிந்து வந்த தம்பதியர் ஒருவரின் 6 வயது குழந்தை ரோஷினி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது.

valparai

அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று, தாய் கண் முன்னே ரோஷினியை கவ்விக் கொண்டு சென்றது. தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இளைஞரை கடித்ததும் இறந்த கொடிய விஷமுள்ள பாம்பு - காரணத்தை பாருங்க

இளைஞரை கடித்ததும் இறந்த கொடிய விஷமுள்ள பாம்பு - காரணத்தை பாருங்க

சிறுமி பலி

உடனே விரைந்து வந்த வனத்துறையினரும், காவல் துறையினரும் சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாய் கண்முன்னே.. சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை - தேடுதல் பணியில் அதிர்ச்சி! | Leopard Kills Girl In Front Of Mother Coimbatore

இந்நிலையில், சிறுமியின் மண்டை ஓடு மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.