சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் மர்மநபர்- 2வது கணவர் போலீசில் புகார்

Jayalalithaa Admk Bjp Sasikalapushpa சசிகலா புஷ்பா
By Petchi Avudaiappan Jan 26, 2022 04:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமக்கு தெரியாமல் வீட்டு படுக்கை அறையில் மர்ம நபர்களை அனுமதித்ததாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.

அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த சசிகலா புஷ்பா திமுக ராஜ்யசபா எம்.பி.திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் ஓங்கி அறைந்தது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக ராஜ்யசபாவில் புகார் எழுப்பி பரபரப்பை கிளப்பியது,2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிட முயற்சித்தத்து என பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ராமசாமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் வழக்கறிஞர் ராமசாமி தன்னை ஏற்கனவே திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சத்யபிரியா என்ற பெண் புகார் கூறி நீதிமன்ற படிகளேறி அதுவும் பெரும் சர்ச்சையானது. ஒருகட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய சசிகலா புஷ்பா, பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆன்லைன் மூலமாக சசிகலா புஷ்பா மீது அவரது 2-வது கணவர் வழக்கறிஞர் ராமசாமி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகிவிட்டு காரில் கடந்த 13 ஆம் தேதி எனது மகளுடன் சென்னை வந்தேன். சென்னை, ஜீவன் பீமா நகரிலுள்ள எனது வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன். அமுதா என்பவர் கதவைத் திறந்தார்.

எங்கள் வீட்டிற்குள் உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஆல்கஹால் வாடை வீசியது. படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்து இருந்தார். மற்றொரு அறையில் உள்ள படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார். நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன்.

அந்த நபரும் அமுதா என்பவரும் என்னை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். எனவே அந்த நபர்கள் மீதும், கணவன் என்ற முறையில் எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் ராமசாமி புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.